ஃபிட்னஸ் ரகசியம் சொல்லும் 40 ப்ளஸ் நடிகர்கள் LifeStartsAt40 நலம்நாற்பது
வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (25/12/2012)
கடைசி தொடர்பு:11:06 (25/12/2012)
புதுடெல்லி: மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் குறித்து வாய் திறக்காமல் இருந்துவந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இன்று வாய் திறந்து டெல்லி மாணவிக்கு நிகழ்ந்த சம்பவம் வேதனையளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில்,"கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் ஓடும் பஸ்சில் இரவில் 6 பேர் கொண்ட கும்பலால் ஒரு 23 வயது துணை மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார்.இளம் மாணவி மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான திடீர் தாக்குதலை கேள்விப்பட்டு நான் மிகுந்த துயரமும் அதிர்ச்சியும் அடைந்தேன்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மக்கள் இரட்டிப்பு முயற்சி எடுக்க வேண்டும்.மக்கள் கொண்டாடும் இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமையை நாம் மறந்து விடமுடியாது.நாடு முழுவதும் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு போராட்டங்கள் வலுத்து வருகிறது.
ஜனாதிபதி மாளிகை அருகிலும் மாணவ-மாணவிகளின் போராட்டம் நடக்கிறது.இந்த நன்நாளில் பாதிக்கப்பட்ட அந்த மாணவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன். மேலும் மன உறுதியும் தைரியும் படைத்த அந்த மாணவி விரைவில் குணமடைய நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.நமது நாட்டில் பெண்கள் அனைவரும் எல்லா நேரத்திலும் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் வகையில் நாம் அவர்களுக்கான பாதுகாப்பு முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும். பெண்களுக்கு பூரண பாதுகாப்பு உள்ளது என்பதை நாம் உறுதி செய்தாக வேண்டும்.
கிறிஸ்துமஸ் தினமான இந்நன்நாள் பொறுப்புணர்ச்சியையும், பயங்கரவாதத்தையும் அகற்றும் என நம்புவோம். உலகம் முழுவதும் மெழுகுவர்த்தி ஒளிஏற்றும் இந்த தருணத்தில் பாதுகாப்பு உணர்வும், பகிர்ந்து கொள்ளும் மனப்பாங்கும் நம்மிடையே பரவட்டும்.
ஒருவருக்கொருவர் அன்பு காட்டுதலையும், மற்றவர்களுக்காக வாழும் தியாகம் பற்றியும் மனித குலத்துக்கு உணர்த்த வந்த இயேசுநாதரை நினைவு கூறும் இந்நேரம் நமது எண்ணங்களையும், இதயங்களையும் நல்ல உணர்வுகளால் புதுப்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.