அ.தி.மு.க., புது பொதுச்செயலர் யார்? கட்சிக்குள் முட்டல் மோதல் ஆரம்பம்

சென்னை: ஜெயலலிதா என்னும் ஆளுமை நிறைந்த பெண்மணி, இனி அ.தி.மு.க.,வுக்கு இல்லை. அதனால், அவர் வகித்து வந்த கட்சியின் பொது செயலர் பதவியை யார் வகிக்கப் போகிறார்கள் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது. இத்தனைப் பெரிய பதவியைப் பிடிக்க, கட்சிக்குள் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதுதான், அ.தி.மு.க., வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ள லேட்டஸ்ட் செய்தி. கட்சியின் பொதுச் செயலர் பதவியைப் பிடிக்க, முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆசைப்படுவதாகவும், அதே நேரம், அந்த பொறுப்புக்கு வர, பார்லிமெண்ட்டின் துணை சபாநாயகர் தம்பிதுரை விரும்புவதாகவும் கட்சித் தரப்பில் இருந்து செய்திகள் கசிகின்றன.நீயா நானா?இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது; முதல்வராகவும்; அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகவும் இருந்த ஜெயலலிதா, இறந்ததும், கட்சியின் பொது செயலர் பொறுப்பில் அமர்வதற்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.